Monday, June 28, 2010

கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள்





கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள்

192 நாடுகள் பங்கேற்ற கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு ( COP 15 ) 2009, டிசம்பர் 19 ல் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் நிறைவுற்றது. இதற்கு முக்கியக்காரணம் உலகின் முக்கிய பசுமை குடில் வாயுக்களை (Green House Gas, GHG) அதிக அளவில் வெளியிடும் நாடுகளான அமெரிக்கா , சீனா உட்பட்ட சிறு குழுவே காரணம். கடைசியில் “கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தம்” (Copenhagen Accord) என்ற சிறு ஆவணத்தில் முடிந்தது. அனைத்து நாடுகளும் இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தில் பின் பற்றாது ”குறித்துக் கொண்டதாக” வாக்களித்தன.

1. இந்த உச்சநிலை மாநாடு வெற்றி பெற்றதா?


தில் கலந்துபட்ட கருத்துகள் உண்டு.நல்ல அம்சம் என்னவென்றால், முதல் முறையாக அமெரிக்கா , சீனா மற்றும் சில முக்கிய வளரும் நாடுகளை GHG வெளியேற்றத்தைக் குறைக்கும் பொருட்டு இணைத்த பெருமை கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தத்தையே சேரும். க்யோட்டோ முன்மாதிரி உடன்படிக்கை ( Kyoto Protocol) யினால் இந்நிலையை அடைய முடியவில்லை – அது வளரும் நாடுகளை கட்டுப்படுத்தாததால் அமெரிக்கா ஏற்கவில்லை. கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தம் படி வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு $100 பில்லியன் 2020 க்குள் வளரும் நாடுகளின் தேவைகளுக்காக நிதி திரட்டவேண்டும்.

ஆனால் இந்த மாநாடு சட்டபூர்வமாக எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எதிர்காலத்திர்க்கான உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் GHG வெளியீடை எவ்வளவு குறைக்க முடியும் என்று சாதாரணமாக கேட்கின்றதே தவிர உறுதி ஏதும் செய்யுமாறு கட்டுப்படுத்தவில்லை. மேலும், 2050க்குள் உலக நாடுகள் எவ்வளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கு ஏதும் சொல்லப்படாதது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 100பில்லியன் டாலர் வளரும் நாடுகளின் தேவைகளுக்காக எப்படி நிதி திரட்ட வேண்டும் என்பதுபற்றி தெளிவற்றதாக இத்தற்காலிக ஒப்பந்தம் உள்ளது.

2. கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

Ø புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2C க்குக் கீழ் இருக்கும் வண்ணம் உலகின் GHG வெளியீடை குறைத்தல்

Ø வளர்ந்த நாடுகள் GHG வெளியீடை குறைக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் மேலும் வளரும் நாடுகள் GHG வெளியீடை குறைக்க அவரவர்களின் திட்டம் என்ன என்பதை ஜனவரி 31, 2010 க்குள் ஐ. நா. சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.

Ø புதிய மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்கள் “ 30 பில்லியன் டாலர்களை அணுகுமாறு” ஏழை நாடுகளுக்கு 2010-12 காலத்திற்குள்ளும் கொடுத்தல் – 2020 ல் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என எதிர்பார்த்தல்

Ø ”கோபன்ஹேகன் பசுமை பருவநிலை நிதியம்” ஒன்று நிறுவப்பட்டு ஐ.நா வின் பருவநிலை உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்டு வளரும் நாடுகளின் பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட திட்டங்களூக்கு நிதி உதவி செய்தல்.

Ø வளரும் நாடுகளின் GHG வெளியீடை குறைப்பதற்கான திட்டங்கள் (projects). ஆனால் சர்வதேச நிதி பெற்றிருப்பின் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும்.

Ø காடுகளைப் பாதுகாக்க நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் – REDD and REDD-plus (Reducing Emissions from Deforestation and Forest Degradation in Developing Countries )

Ø இந்த ஒப்பந்தம் அமலாக்கம் செய்தது குறித்த மீள் பார்வை 2015 செய்யப்படும்

Ø புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2C லிருந்து 1.5 C குறைப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும்.

கட்டுரை தொடரும்....

Sunday, June 27, 2010

டென்மார்க் தீர்மானம் பாதிப்பு ஏற்படுத்தாது


டென்மார்க் தீர்மானம் பாதிப்பு ஏற்படுத்தாது: ஜெய்ராம் ரமேஷ் தகவல்
டிசம்பர் 23,2009
புதுடில்லி : டென்மார்க் மாநாட்டு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால், நம்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


புவி வெப்பமடைவதை தடுக்க தேவையான நடவடிக் கைகள் எடுப்பது குறித்து விவாதிக்க, கடந்த வாரம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 190 நாடுகள் பங்கேற்ற மாநாடு நடந்தது.வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாட்டால், இந்த மாநாடு குழப்பத்தில் முடிந்தது. இது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.


இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:பிரேசில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, சீனா உள் ளிட்ட வளரும் நாடு களுடன் இணைந்து வரைவு ஒப்பந்த தீர்மானத்துக்கு ஒப்புக் கொண்டதால், நம்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால், இந்த தீர் மானத்தால் நம்நாட் டின் இறையாண்மையின் மதிப்பு உயரத்தான் செய்யும்.வரும் 2020ம் ஆண்டில் கரியமில வாயு(கார்பன் - டை ஆக்சைடு) வெளியேற்றத்தை 20 முதல் 25 சதவீதம் கட்டுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். இதை மற்ற நாடுகளின் நிர் பந்தத்தின் பேரில் நாம் செய்யவில்லை. கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதால் நமக்கு வளர்ந்த நாடுகளிடமிருந்து எந்த நிதிஉதவியும் கிடைக்காது.


இதே போல, கார்பன் வாயுவை கட்டுபடுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கும் எந்த சலுகையும் அளிக்கும் திட்டமில்லை. கார்பன் வாயுவை கட்டுபடுத்துவதில், நிதி ஒரு பொருட் டல்ல. நமக்கு வெளிநாட்டு நிதி இந்த விஷயத்தில் தேவையில்லை. பசுமை தொழில் நுட்பத்தில் உலக அளவில் நம்மால் முன்னேற முடியும்.கோபன்ஹேகன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எந்த சட்டத்திட்டத்துக்கும் உட்பட்டதல்ல.இந்த மாநாட்டு தீர்மானங்கள் இறுதியானதல்ல. வரக்கூடிய காலங்களில் ஏற்படும் அபாயத்தை தவிர்ப்பதற்கு, முன் னெச்சரிக்கையாக இருப்பதற் கான முயற்சி தான்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

நன்றி: தினமலர்

தோல்வியில் முடிந்தது கோபன்ஹேகன் மாநாடு

தோல்வியில் முடிந்தது கோபன்ஹேகன் மாநாடு
டிசம்பர் 20,2009

கோபன்ஹேகன்:கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு, எந்த விதமான முடிவும் எடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. இந்தியா உட்பட பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நான்கு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா உருவாக்கிய ஒப்பந்தத்தை பெரும்பாலான ஏழை நாடுகள் நிராகரித்து விட்டன. அந்த ஒப்பந்தம் பாரபட்சமானது என்றும் விமர்சித்துள்ளன.


டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு இரு வாரங்களாக நடந்தது. 194 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தொழிற்சாலைகளிலிருந்து, வெளியேறும் கரியமிலவாயுவை கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.ஐந்து வகையான வெப்ப வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து, 1997ல் நிறைவேற்றப்பட்ட கியோட்டா தீர்மானம் பற்றியும், மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால், பனி மலைகள் உருகி, கடல் மட்டம் அதிகரிப்பதால் குட்டி தீவு நாடுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தீவு நாடுகள் கோரின.வெப்பவாயு வெளியேற்றத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெளியேறுவதை தடுத்தால், உற்பத்தி பாதிக்கும் என, வளரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரண்டன. வெப்பவாயு வெளியேற்றத்தை குறைப்பதால் ஏற்படும் இழப்புக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என, வளர்ந்த நாடுகளிடம் இந்த நாடுகள் கோரின.


இதனால், அமெரிக்காவுக்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடை யே ஒப்பந்தம் ஒன்று உருவானது. இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன பிரதமர் வென் ஜியாபோ, தென்னாப்ரிக்க பிரதமர் ஜூமா, பிரேசில் அதிபர் லூபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சார்பாக அதிபர் ஒபாமா பங்கேற்றார்.ஆனால், ஒப்பந்தத்தில், வளர்ந்த நாடுகளில் வெளியாகும் கரியமில வாயுவை கட்டுப்படுத்த எவ்விதமான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் நிர்ணயிக்கப்படவில்லை.இது மற்ற நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. "பாரபட்சமான இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக உள்ளது' என, பெரும்பாலான ஏழை நாடுகள் தெரிவித்து விட்டன.


"இந்த ஒப்பந்த நடவடிக்கைகளில் தங்களை சேர்க்காததன் மூலம், அமெரிக்காவும் மற்ற ஐந்து நாடுகளும் தங்களை அவமானப்படுத்தி விட்டன. அந்த நாடுகள் தங்களின் தீர்மானத்தை மற்ற நாடுகள் மீது திணிக்க முற்படுகின்றன. ஒப்பந்தம் உருவாக காரணமாக இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு சக்கரவர்த்தி போல செயல்படுகிறார். ஒப்பந்தம் ஐ.நா., விதிமுறைகளுக்கு முரணானது' என, பொலிவியா, கோஸ்டாரிகா, வெனிசூலா, கியூபா போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.இதனால், எவ்விதமான உறுதியான முடிவும் எடுக்க முடியாமல் கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது.

நன்றி: தினமலர்

பருவநிலை மாறுபாடு:​ இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது- ஆர்.கே.​ பச்செüரி கருத்து

பருவநிலை மாறுபாடு:​ இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது- ஆர்.கே.​ பச்செüரி கருத்து

புதுதில்லி,​​ டிச.22:​ பருவநிலை மாறுபாடு தொடர்பாக இந்தியா எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கண்காணிக்க முடியாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.​ பச்செüரி தெரிவித்தார்.
​ பருவ நிலை மாறுபாடு குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எந்த அளவுக்குப் பின்பற்றப் போகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்கும் என்று அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டேவிட் ஆக்ஸில்ராட் தெரிவித்திருந்தார்.​ ​
÷பருவநிலை மாறுபாடு குறித்து அரசுகளிடையிலான குழுவின் தலைவராக உள்ள பச்சௌரி,​​ அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி டேவிட் ஆக்ùஸல்ராட் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதைத் தெரிவித்துள்ளார்.​ அவர் மேலும் கூறியது:​ ​
​ ​ ​ தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அதற்கு வழியே இல்லை.​ இந்த தீர்மானத்தை ஆக்ஸில்ராட் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.​ எந்த ஒரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை பிற நாடுகள் கண்காணிக்க இந்தத் தீர்மானத்தில் எவ்வித விதிமுறைகளும் இல்லை.
​ ​ ​ ​ இந்தியாவையும்,​​ சீனாவையும் பணியவைத்துவிட்டோம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ​ ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.​ ​
​ ​ ​ ​ ​ அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதா மற்றும் வர்த்தக மசோதா கொண்டு வரப்பட உள்ளது.​ எனவேதான் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை சமாதானப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை ஆக்ஸில்ராட் தெரிவித்திருக்கலாம் என்று பச்சௌரி குறிப்பிட்டார்.​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியா மீது எவ்வித நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை.​ கோபன்ஹேகன் மாநாட்டு மூலம் பிற நாடுகளை கண்காணிப்பது மற்றும் பரிசீலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.​ ஆனால் அதை இந்தியா ஆரம்பத்திலேயே ஏற்கவில்லை.
​ ​ ​ ​ சட்டபூர்வ கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.​ எனவே தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகத் தெளிவாக உள்ளது.​ ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு மூலம் கரியமில வாயு கட்டுப்படுத்துவது குறித்து கூறியுள்ளது.​ ​ ஆலோசனை,​​ பகுப்பாய்வு என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.​ ஆனால் ஆக்ஸில்ராட்,​​ இந்த விதிகளை இந்தியா மற்றும் சீனாவுக்கு மட்டும் பொறுப்பாக்கியுள்ளார்.​ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாமும் பரிசீலனை செய்ய முடியும்.​ நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா என்பதை நாமும் கண்காணிக்க முடியும் என்றார் பச்சௌரி.

நன்றி: தினமணி

கோபன்ஹேகனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை: ஒபாமா ஒப்புதல்

கோபன்ஹேகனில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை: ஒபாமா ஒப்புதல்

வாஷிங்டன்,​​ டிச.​ 24: டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
சரி ஒன்றும் ஆகாது என்று இந்திய பிரதமர் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுவிட்டார்.​ சீனா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விலகி விட்டனர்.​ அவ்வளவுதான் கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வியில் முடிந்துவிடும் நிலையில் இருந்தது.​ ஆனால் தோல்வியில் முடிந்துவிட கூடாது என்று நான் எடுத்த முயற்சியால் சில முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது.
நாம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிட்டவில்லைதான்.​ அடுத்த 40 ஆண்டுகளுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை வெகுவாக குறைத்தாக வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது உள்ள நிலையில் பின்நோக்கி சென்றுவிட கூடாது என்பதற்காக சில நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன.​ அதன் பயனாக தற்போது உள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.​ இந்த ஒப்பந்தத்தை சட்டப்பூர்மாக கட்டுப்படுத்தவோ நிர்பந்திக்க முடியாது.​ என்றாலும் அமெரிக்கா,​​ ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் சீனா,​​ இந்தியா ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கு இணங்கி வந்துள்ளன என்று ஓபாமா கூறினார்.
டென்மார்க்கில் நடைபெற்ற கோபன்ஹேகன் மாநாட்டில் வளர்ந்த நாடுகள் முன்வைத்த திட்டத்தை இந்தியா,​​ சீனா,​​ பிரேசில்,​​ தென்னாப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகள் ஏற்கவில்லை.​ இதையடுத்து 4 வளரும் நாடுகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி தற்போது உள்ள ஒப்பந்ததுக்கு வழிகண்டது.

நன்றி: தினமணி

பருவநிலை மாறுபாடு: இந்தியா,​​ சீனாவுக்கு அமெரிக்கா சவால்

பருவநிலை மாறுபாடு: இந்தியா,​​ சீனாவுக்கு அமெரிக்கா சவால்
வாஷிங்டன்,​​ டிச.21:​ பருவ நிலை மாறுபாட்டைக் குறைக்க கோபன்ஹேகன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எந்த அளவுக்குப் பின்பற்றப் போகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்கும்.​ இத்தகவலை அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ ​ பருவ நிலை மாறுபாட்டைக் குறைக்க வளரும் நாடுகள்,வளர்ச்சியடைந்த நாடுகள் உள்பட 196 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இரண்டுவாரம் பேச்சு நடத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.​ இத்தீர்மானத்துக்கு ஏழை நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.​ இந்தியா,​​ சீனா,​​ தென்னாப்பிரிக்கா,​​ பிரேஸில் ஆகிய நாடுகள் முன்வைத்த தீர்மானத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
​ ​ ​ ​ கோபன்ஹேகனில் எட்டப்பட்ட தீர்மானம் இந்தியாவுக்கு மிகவும் நல்லது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.​ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்த இந்தத் தீர்மானத்துக்கு தற்போது அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டேவிட் ஆக்ஸில்ராட் என்பவர்,​​ பிற நாடுகள் இதை எவ்விதம் பின்பற்றுகின்றன என்று கண்காணிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.​ இது தொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:​ ​
​ ​ ​ ​ புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள இந்தியாவும்,​​ சீனாவும் இதை எவ்விதம் பின்பற்றப் போகின்றன என்று புரியவில்லை.​ தற்போது வரையறுக்கப்பட்ட அளவின்படி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பது மிகவும் கட்டாயமாகும்.​ தீர்மானத்தில் உள்ளபடி அவர்கள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்களா என்று அமெரிக்கா கண்காணிக்கும்.​ ​
​ ​ ​ சட்ட ரீதியாக எவ்வித கட்டுப்பாடுகள்,​​ நிபந்தனைகள் விதிக்காமல் இந்தத் தீர்மானம் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.​ பருவ நிலை மாறுபாட்டுக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.​ ​
​ ​ ​ ​ தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் மட்டுமே முடிவாகாது.​ இத்துடன் இப்பிரச்னை தீர்ந்துவிடாது.​ இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிக முக்கியமானது.​ தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் உள்ளதைச் செயல்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் டேவிட் ஆக்ஸில்ராட்.
​ ​ ​ ​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக புவி வெப்பமடைவதை 2 டிகிரி குறைக்க வேண்டும் என்று கோபன்ஹேகன் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி

கோபன்ஹேகன் ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது: அமைச்சர் உறுதி

கோபன்ஹேகன் ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது: அமைச்சர் உறுதி
புதுதில்லி,​​ டிச.​ 22: புவி வெப்பமடைதலை குறைப்பது தொடர்பாக கோபன்ஹேகன் மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது என்று மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டமாகக் கூறினார்.
அதேவேளையில் இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் வெளிநாட்டு தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதியிலிருந்து பின்வாங்க நேரிட்டுள்ளது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பருவநிலை மாறுபாட்டுக்கான ஐ.நா.​ குழுவிடம் மட்டுமே நாம் தெரிவிப்போம்.​ இதில் வெளிநாட்டு தலையீடு இருக்காது என்று அரசு முன்பு உறுதி கூறியிருந்தது.​ ஆனால் இப்போது வெளிநாட்டு ஆலோசனை மற்றும் பகுப்பாய்வை அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியபோது,​​ அரசு தனது நிலையிலிருந்து மாறியுள்ளதை அமைச்சர் ஒப்புக்கொண்டார்.​ ​
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் பற்றி அமைச்சர் ரமேஷ் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிக்கை தாக்கல் செய்தார்.
எகிப்தில் வெளியிடப்பட்ட இந்திய-பாகிஸ்தான் கூட்டறிக்கை எப்படி இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததோ அதுபோல கோபன்ஹேகன் மாநாட்டில் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் இந்தியாவுக்கு பாதகமாகவே அமையும் என்று ஜேட்லி குற்றம்சாட்டினார்.​ ​
கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதற்காகவே சீனா,​​ பிரேசில்,​​ தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா ஒப்புக்கொண்டது என்று அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்தார்.
அதேநேரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் வெளிநாட்டு ஆலோசனை மற்றும் பகுப்பாயை அனுமதிப்பதால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படாது.​ இறையாண்மை பாதிக்கப்படாத வகையில்தான் அதற்கான வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பூர்வமாக கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை.​ இது இந்தியாவுக்கு பெரும் வெற்றி.​ மேலும் புவியின் வெப்பத்தை 2 டிகிரி ​ செல்சியஸ் குறைப்பதற்கு காலவரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு ஆலோசனைக்கு அனுமதிக்கப்படுமே தவிர வெளிநாட்டு சோதனைக்கு ஒரு நாளும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.​ ​
கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் நாட்டின் நலனில் அரசு சமரசம் செய்து கொண்டதாக பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.​ இந்த ஒப்பந்தம் கியோடோ ஒப்பந்தத்தை நீர்த்துப்போகச் செய்துவிடும் அபாயம் உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவுகள் கியோடோ ஒப்பந்தத்துக்கு சாவுமணி அடிக்கும் நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
புவி வெப்பமடைதலைக் குறைப்பது தொடர்பாக கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு சாதகமாக ஏதுமில்லை.​ அதற்குப் பதிலாக பாதகமான அம்சங்களே அதிகம் உள்ளன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.​ ராஜா கூறினார்.
ஆனால் அமைச்சர் ரமேஷ் இதை மறுத்தார்.​ தற்போதைய நிலையில் கோபன்ஹேகன் ஒப்பந்தம் எல்லா அம்சங்களிலும் திருப்தியளிப்பதாக உள்ளது.​ சட்டப்பூர்வ கட்டுப்பாடோ அல்லது நிபந்தனையோ இல்லை என்பதை மீண்டும் சுட்டிக்காட்டினார்.​ கோபன்ஹேகன் மாநாடு முடிவு அல்ல.​ இது தொடக்கம்தான்.​ இன்னும் கடக்க வேண்டிய பாதை அதிகம் உள்ளது என்று கூறினார்.
கரியமில வாயுவைக் குறைப்பதற்கான திட்டம் விரைவில் வெளியிடப்படும்.​ மேலும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

நன்றி: தினமணி