Sunday, June 27, 2010

டென்மார்க் தீர்மானம் பாதிப்பு ஏற்படுத்தாது


டென்மார்க் தீர்மானம் பாதிப்பு ஏற்படுத்தாது: ஜெய்ராம் ரமேஷ் தகவல்
டிசம்பர் 23,2009
புதுடில்லி : டென்மார்க் மாநாட்டு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால், நம்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


புவி வெப்பமடைவதை தடுக்க தேவையான நடவடிக் கைகள் எடுப்பது குறித்து விவாதிக்க, கடந்த வாரம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் 190 நாடுகள் பங்கேற்ற மாநாடு நடந்தது.வளரும் நாடுகளுக்கும், வளர்ந்த நாடுகளுக்கு இடையே கருத்து முரண்பாட்டால், இந்த மாநாடு குழப்பத்தில் முடிந்தது. இது குறித்து ராஜ்யசபாவில் எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.


இதற்கு பதில் அளித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:பிரேசில், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, சீனா உள் ளிட்ட வளரும் நாடு களுடன் இணைந்து வரைவு ஒப்பந்த தீர்மானத்துக்கு ஒப்புக் கொண்டதால், நம்நாட்டின் இறையாண்மைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால், இந்த தீர் மானத்தால் நம்நாட் டின் இறையாண்மையின் மதிப்பு உயரத்தான் செய்யும்.வரும் 2020ம் ஆண்டில் கரியமில வாயு(கார்பன் - டை ஆக்சைடு) வெளியேற்றத்தை 20 முதல் 25 சதவீதம் கட்டுபடுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். இதை மற்ற நாடுகளின் நிர் பந்தத்தின் பேரில் நாம் செய்யவில்லை. கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதால் நமக்கு வளர்ந்த நாடுகளிடமிருந்து எந்த நிதிஉதவியும் கிடைக்காது.


இதே போல, கார்பன் வாயுவை கட்டுபடுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கும் எந்த சலுகையும் அளிக்கும் திட்டமில்லை. கார்பன் வாயுவை கட்டுபடுத்துவதில், நிதி ஒரு பொருட் டல்ல. நமக்கு வெளிநாட்டு நிதி இந்த விஷயத்தில் தேவையில்லை. பசுமை தொழில் நுட்பத்தில் உலக அளவில் நம்மால் முன்னேற முடியும்.கோபன்ஹேகன் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எந்த சட்டத்திட்டத்துக்கும் உட்பட்டதல்ல.இந்த மாநாட்டு தீர்மானங்கள் இறுதியானதல்ல. வரக்கூடிய காலங்களில் ஏற்படும் அபாயத்தை தவிர்ப்பதற்கு, முன் னெச்சரிக்கையாக இருப்பதற் கான முயற்சி தான்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

நன்றி: தினமலர்

No comments:

Post a Comment