Sunday, June 27, 2010

பருவநிலை மாறுபாடு: இந்தியா,​​ சீனாவுக்கு அமெரிக்கா சவால்

பருவநிலை மாறுபாடு: இந்தியா,​​ சீனாவுக்கு அமெரிக்கா சவால்
வாஷிங்டன்,​​ டிச.21:​ பருவ நிலை மாறுபாட்டைக் குறைக்க கோபன்ஹேகன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எந்த அளவுக்குப் பின்பற்றப் போகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்கும்.​ இத்தகவலை அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.​ ​
​ ​ ​ பருவ நிலை மாறுபாட்டைக் குறைக்க வளரும் நாடுகள்,வளர்ச்சியடைந்த நாடுகள் உள்பட 196 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் இரண்டுவாரம் பேச்சு நடத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.​ இத்தீர்மானத்துக்கு ஏழை நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.​ இந்தியா,​​ சீனா,​​ தென்னாப்பிரிக்கா,​​ பிரேஸில் ஆகிய நாடுகள் முன்வைத்த தீர்மானத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
​ ​ ​ ​ கோபன்ஹேகனில் எட்டப்பட்ட தீர்மானம் இந்தியாவுக்கு மிகவும் நல்லது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.​ அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புதல் அளித்த இந்தத் தீர்மானத்துக்கு தற்போது அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டேவிட் ஆக்ஸில்ராட் என்பவர்,​​ பிற நாடுகள் இதை எவ்விதம் பின்பற்றுகின்றன என்று கண்காணிக்கப் போவதாக சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.​ இது தொடர்பாக சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது:​ ​
​ ​ ​ ​ புதிய தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள இந்தியாவும்,​​ சீனாவும் இதை எவ்விதம் பின்பற்றப் போகின்றன என்று புரியவில்லை.​ தற்போது வரையறுக்கப்பட்ட அளவின்படி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பது மிகவும் கட்டாயமாகும்.​ தீர்மானத்தில் உள்ளபடி அவர்கள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்களா என்று அமெரிக்கா கண்காணிக்கும்.​ ​
​ ​ ​ சட்ட ரீதியாக எவ்வித கட்டுப்பாடுகள்,​​ நிபந்தனைகள் விதிக்காமல் இந்தத் தீர்மானம் கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.​ பருவ நிலை மாறுபாட்டுக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.​ ​
​ ​ ​ ​ தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் மட்டுமே முடிவாகாது.​ இத்துடன் இப்பிரச்னை தீர்ந்துவிடாது.​ இந்த மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிக முக்கியமானது.​ தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் உள்ளதைச் செயல்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் டேவிட் ஆக்ஸில்ராட்.
​ ​ ​ ​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக புவி வெப்பமடைவதை 2 டிகிரி குறைக்க வேண்டும் என்று கோபன்ஹேகன் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி

No comments:

Post a Comment