Sunday, June 27, 2010

கோபன்ஹேகன் மாநாட்டிலிருந்து இந்தியா வெளிநடப்பு!

சனிக்கிழமை, 19, டிசம்பர் 2009
கோபன்ஹேகன்:

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் பருவநிலை மாநாட்டில் வளர்ந்த நாடுகள் கொண்டுவந்த தீர்மானம்களை பாதிக்கும் என்று கூறி இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகள் வெளிநடப்பு செய்தன.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவினர் மாநாட்டு அரங்கிலிருந்து வெளியேறினர். புவி வெப்படைதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை தடுப்பது பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா.சபை சார்பில் பருநிலை மாநாடு நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் வளரும் நாடுகளுக்கும்,
வளர்ந்தநாடுகளுக்கும் கடும் கருத்துவேறுபாடுகள் நிலவியது. நச்சுப்புகையை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்ககை வைத்தனர். இதை வளர்ந்தநாடுகள் ஏற்கவில்லை. இதனால் முடிவெதும் எடுக்கப்படாமல் பேச்சுவார்த்தை இழுப்பரியானது.

இதைத்தொடர்ந்து வளர்ந்த நாடுகளின் போக்கை கண்டித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங், சின பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் தங்கள் குழுவினருடன் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.

No comments:

Post a Comment