Sunday, June 27, 2010

பருவநிலை மாறுபாடு:​ இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது- ஆர்.கே.​ பச்செüரி கருத்து

பருவநிலை மாறுபாடு:​ இந்திய விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது- ஆர்.கே.​ பச்செüரி கருத்து

புதுதில்லி,​​ டிச.22:​ பருவநிலை மாறுபாடு தொடர்பாக இந்தியா எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கண்காணிக்க முடியாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.​ பச்செüரி தெரிவித்தார்.
​ பருவ நிலை மாறுபாடு குறித்து கோபன்ஹேகன் மாநாட்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எந்த அளவுக்குப் பின்பற்றப் போகிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்கும் என்று அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி டேவிட் ஆக்ஸில்ராட் தெரிவித்திருந்தார்.​ ​
÷பருவநிலை மாறுபாடு குறித்து அரசுகளிடையிலான குழுவின் தலைவராக உள்ள பச்சௌரி,​​ அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி டேவிட் ஆக்ùஸல்ராட் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இதைத் தெரிவித்துள்ளார்.​ அவர் மேலும் கூறியது:​ ​
​ ​ ​ தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் அதற்கு வழியே இல்லை.​ இந்த தீர்மானத்தை ஆக்ஸில்ராட் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்.​ எந்த ஒரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை பிற நாடுகள் கண்காணிக்க இந்தத் தீர்மானத்தில் எவ்வித விதிமுறைகளும் இல்லை.
​ ​ ​ ​ இந்தியாவையும்,​​ சீனாவையும் பணியவைத்துவிட்டோம் என தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் ​ ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.​ ​
​ ​ ​ ​ ​ அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதா மற்றும் வர்த்தக மசோதா கொண்டு வரப்பட உள்ளது.​ எனவேதான் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களை சமாதானப்படுத்துவதற்காக இதுபோன்ற கருத்துகளை ஆக்ஸில்ராட் தெரிவித்திருக்கலாம் என்று பச்சௌரி குறிப்பிட்டார்.​ கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்தியா மீது எவ்வித நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை.​ கோபன்ஹேகன் மாநாட்டு மூலம் பிற நாடுகளை கண்காணிப்பது மற்றும் பரிசீலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.​ ஆனால் அதை இந்தியா ஆரம்பத்திலேயே ஏற்கவில்லை.
​ ​ ​ ​ சட்டபூர்வ கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.​ எனவே தற்போது கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகத் தெளிவாக உள்ளது.​ ஆலோசனை மற்றும் பகுப்பாய்வு மூலம் கரியமில வாயு கட்டுப்படுத்துவது குறித்து கூறியுள்ளது.​ ​ ஆலோசனை,​​ பகுப்பாய்வு என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது.​ ஆனால் ஆக்ஸில்ராட்,​​ இந்த விதிகளை இந்தியா மற்றும் சீனாவுக்கு மட்டும் பொறுப்பாக்கியுள்ளார்.​ அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாமும் பரிசீலனை செய்ய முடியும்.​ நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அவர்கள் நிறைவேற்றுகிறார்களா என்பதை நாமும் கண்காணிக்க முடியும் என்றார் பச்சௌரி.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment