Sunday, June 27, 2010

இந்தியா மீது அமெரிக்கா நிர்பந்தம்

கோபன்ஹேகன் மாநாட்டு தீர்மானம்: இந்தியா மீது அமெரிக்கா நிர்பந்தம்


புது தில்லி, ஜன. 13: கோபன்ஹேகன் மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்குமாறு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கட்டாயப்படுத்தியதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள ஆஸ்பின் மைய விழாவில் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் புவி வெப்பமடைவது குறித்த மாநாட்டில் எவ்வித முடிவும் எட்டப்படக்கூடாது என்று வேண்டுமென்றே ஐரோப்பிய நாடுகள் முட்டுக்கட்டை போட்டன. ஆனால் முடிவு எட்டப்படாததற்கு இந்தியா, சீனா, பிரேஸில் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்கா செய்தியைப் பரப்பியது.
÷மாநாட்டின் நிறைவு நாளன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, வங்கதேசம் மற்றும் மாலத்தீவு பிரதிநிதிகளை அழைத்து இம்மாநாட்டில் தீர்மானம் எட்டுவதற்கு இந்த நான்கு நாடுகள் ஒத்துழைக்காவிடில் உங்களுக்கு எவ்வித நிதியும் கிடைக்காது என்று அச்சுறுத்தும் தொணியில் உறுதிபடத் தெரிவித்தார். இதனால் அந்நாடுகள் மூலம் நான்கு நாடுகளுக்கும் மறைமுக நெருக்குதல் ஏற்படுத்தப்பட்டது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற வேண்டுமென்றால் அதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். இந்த ஒப்பந்தத்தை நான்கு நாடுகளும் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
÷வங்கதேசத்துக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் அளிக்கும் உதவித் தொகையை தடுத்து நிறுத்தப் போகிறீர்களா? என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா என்னிடமே கேட்டார். இந்த விஷயத்தில் அதிக அளவில் கரியமில வாயு வெளியிடும் நாடுகளில் ஒன்றான சீனா சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்றார்.
இந்த ஒப்பந்தத்தின்படி 10,000 கோடி டாலர் நிதியத்தை அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளான வங்கதேசம், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இது பயன்படுத்தப்படும். இந்தியா, பிரேஸில், சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிடையே சிறப்பான புரிதலை இம்மாநாடு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த மாநாட்டில் உறுதியான முடிவு எட்டப்படாதது அனைத்து நாடுகளுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருப்பினும் அடிப்படை நாடுகளான இந்தியா, சீனா, பிரேஸில், தென்னாப்பிரிக்கா ஆகியவை இம்மாத இறுதியில் தில்லியில் பேச்சு நடத்த உள்ளன. அப்போது வளி மண்டலத்தைப் பாதிக்கும் கார்பன்-டை ஆக்ûஸடு உள்ளிட்ட வாயு வெளியேற்றத்துக்கான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் ஜெய்ராம் ரமேஷ்

நன்றி: தினமணி

1 comment:

  1. By this news I came to understand that the pressure given by USA had made the BASIC to withdraw their plan decided to comple the Developed nations

    ReplyDelete