Wednesday, November 17, 2010

கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள் 2


தொடர்ச்சி...

3. இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த நாடுகள் யாவை?

பிரான்ஸ், ஜெர்மனி, பிரட்டன் போன்ற நாடுகளுடன் பேசி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொண்டன. பெரும்பாலான நாடுகள் ஆதரவு அளித்தபோதும் வெனிசுலா, போல்வியா, ஈகுவடார், க்யூபா போன்ற நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

4. கோபன்ஹேகன் உச்சி மாநாடு எதற்காகத்தான் நடந்தது?

உலகின் பல அரசாங்கங்கள் பருவநிலை மாற்றம் மனித இனத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறத்தலாகக் கருதுகின்றன. அடுத்து அடுத்து வெளிவந்த அறிவியல் அறிக்கைகள் குறிப்பாக IPCC யின் அறிக்கை பருவநிலை மாற்றத்தில் மனித இனத்தின் பங்கினை உறுதி செய்தன. 2007ம் ஆண்டு பாலியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை பேச்சுவார்த்தையில் ஒரு உலக அளவிளான ஒப்பந்தம் செய்துகொள்ள அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன் தொடர்ச்சியே கோபன்ஹேகன் மாநாடு.

தொடரும்...