Monday, June 28, 2010

கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள்





கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு கேள்வி – பதில்கள்

192 நாடுகள் பங்கேற்ற கோபன்ஹேகன் பருவநிலைமாற்றம் மாநாடு ( COP 15 ) 2009, டிசம்பர் 19 ல் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படாத நிலையில் நிறைவுற்றது. இதற்கு முக்கியக்காரணம் உலகின் முக்கிய பசுமை குடில் வாயுக்களை (Green House Gas, GHG) அதிக அளவில் வெளியிடும் நாடுகளான அமெரிக்கா , சீனா உட்பட்ட சிறு குழுவே காரணம். கடைசியில் “கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தம்” (Copenhagen Accord) என்ற சிறு ஆவணத்தில் முடிந்தது. அனைத்து நாடுகளும் இந்தத் தற்காலிக ஒப்பந்தத்தில் பின் பற்றாது ”குறித்துக் கொண்டதாக” வாக்களித்தன.

1. இந்த உச்சநிலை மாநாடு வெற்றி பெற்றதா?


தில் கலந்துபட்ட கருத்துகள் உண்டு.நல்ல அம்சம் என்னவென்றால், முதல் முறையாக அமெரிக்கா , சீனா மற்றும் சில முக்கிய வளரும் நாடுகளை GHG வெளியேற்றத்தைக் குறைக்கும் பொருட்டு இணைத்த பெருமை கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தத்தையே சேரும். க்யோட்டோ முன்மாதிரி உடன்படிக்கை ( Kyoto Protocol) யினால் இந்நிலையை அடைய முடியவில்லை – அது வளரும் நாடுகளை கட்டுப்படுத்தாததால் அமெரிக்கா ஏற்கவில்லை. கோபன்ஹேகன் தற்காலிக ஒப்பந்தம் படி வளர்ந்த நாடுகள் ஆண்டுக்கு $100 பில்லியன் 2020 க்குள் வளரும் நாடுகளின் தேவைகளுக்காக நிதி திரட்டவேண்டும்.

ஆனால் இந்த மாநாடு சட்டபூர்வமாக எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எதிர்காலத்திர்க்கான உறுதியான நிலைப்பாடு எதையும் எடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் GHG வெளியீடை எவ்வளவு குறைக்க முடியும் என்று சாதாரணமாக கேட்கின்றதே தவிர உறுதி ஏதும் செய்யுமாறு கட்டுப்படுத்தவில்லை. மேலும், 2050க்குள் உலக நாடுகள் எவ்வளவு குறைக்க வேண்டும் என்ற இலக்கு ஏதும் சொல்லப்படாதது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 100பில்லியன் டாலர் வளரும் நாடுகளின் தேவைகளுக்காக எப்படி நிதி திரட்ட வேண்டும் என்பதுபற்றி தெளிவற்றதாக இத்தற்காலிக ஒப்பந்தம் உள்ளது.

2. கோபன்ஹேகன் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

Ø புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2C க்குக் கீழ் இருக்கும் வண்ணம் உலகின் GHG வெளியீடை குறைத்தல்

Ø வளர்ந்த நாடுகள் GHG வெளியீடை குறைக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் மேலும் வளரும் நாடுகள் GHG வெளியீடை குறைக்க அவரவர்களின் திட்டம் என்ன என்பதை ஜனவரி 31, 2010 க்குள் ஐ. நா. சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.

Ø புதிய மற்றும் கூடுதல் நிதி ஆதாரங்கள் “ 30 பில்லியன் டாலர்களை அணுகுமாறு” ஏழை நாடுகளுக்கு 2010-12 காலத்திற்குள்ளும் கொடுத்தல் – 2020 ல் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என எதிர்பார்த்தல்

Ø ”கோபன்ஹேகன் பசுமை பருவநிலை நிதியம்” ஒன்று நிறுவப்பட்டு ஐ.நா வின் பருவநிலை உடன்படிக்கையின் கீழ் நிறுவப்பட்டு வளரும் நாடுகளின் பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட திட்டங்களூக்கு நிதி உதவி செய்தல்.

Ø வளரும் நாடுகளின் GHG வெளியீடை குறைப்பதற்கான திட்டங்கள் (projects). ஆனால் சர்வதேச நிதி பெற்றிருப்பின் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும்.

Ø காடுகளைப் பாதுகாக்க நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் – REDD and REDD-plus (Reducing Emissions from Deforestation and Forest Degradation in Developing Countries )

Ø இந்த ஒப்பந்தம் அமலாக்கம் செய்தது குறித்த மீள் பார்வை 2015 செய்யப்படும்

Ø புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 2C லிருந்து 1.5 C குறைப்பது குறித்து மதிப்பீடு செய்யப்படும்.

கட்டுரை தொடரும்....

No comments:

Post a Comment